Sunday, June 20, 2010

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"

நமது முன்னோர் சொல்லி வைத்த சில பழமொழிகள் தற்பொழுது வேறு வடிவம் கொண்டுள்ளன.அவற்றின் உண்மை வடிவத்தினை நாம் இத்தொடரின் மூலம் காண்போம் .

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை வடிவினை காண்போம்.சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் பயன்படுத்தினார்கள்.அந்த பாய் புல்லுகொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.அந்தபுல்லு கற்பூரபுல்லு,கோரைப்புல்லு என இரு வகைப்படும்.கோரைபுல்லுக்கு கழு என்று வேறு ஒருபெயர் உண்டு. கற்பூரபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாயில் கற்பூர வாசனை வரும்.கற்பூர பாயின் விலை அதிகம் பெரிய செல்வந்தர்கள் தான் அதனை பயன்படுத்துவார்கள்.கோரைபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும்.இதன் விளையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும்.இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை"கழு என்றகோரைபுல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து 'கழுதைக்க,கழுதைக்க' என்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி 'கழுதைக்கு' என்று ஆகிவிட்டது.அதன்உண்மையான அர்த்தம் "கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாயில் எப்படி கற்பூர வாசனை வரும்?" என்பது தான்.அது தான் தற்பொழுது மருவி "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஆகி விட்டது.அடுத்த கட்டுரையில் வேறு ஒரு பழமொழியின் தற்போதைய வடிவத்தின் உண்மை வடிவத்தினை காண்போம்.

அன்புடன்

.சசிகனி

2 comments:

  1. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete