
இந்து மதத்தின் மேன்மைகள் உலகம் அறியாததல்ல .அறிவியலுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பினை இந்த கட்டுரையின் மூலம் இனி அறிவோம் .
எங்கள் அம்மா நாங்கள் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தால் காலை நன்றாக அலம்பி விட்டு உள்ளே வரச்சொல்லுவார்கள். காலில் சிறிது இடம் கூட தண்ணீர் படாமல் கழுவச்சொல்லுவார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அந்த தண்ணீர் படாத இடத்தினை சனிபகவான் வந்து பிடித்துகொள்வார்.பிறகு நமது வாழ்க்கையில் சிரமப்பட வேண்டியிருக்கும் .அதனால் நன்றாக அலம்பிவிட்டு உள்ளே வாருங்கள் என்று சொல்லுவார்கள்.இதனை பார்த்தல் சில அறிவுஜீவிகள் கிண்டல் பண்ண கூடும். ஆழ்ந்து பார்த்தல் அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று தெரியவரும். நாம் வெளியில் சென்றால் பல இடங்களுக்கு செல்வோம்.அதனால் நமது கால்களில் பல கிருமிகள் தொற்றிக்கொள்ளும் அந்த கால்களோடு வீட்டிற்க்குள் வந்தால் வீட்டிற்குள்ளும் அந்த நோய்கிருமிகள் வந்து விடும் அதனால் தான் எனது அம்மா அப்படி சொல்லியுள்ளார்கள்.இதனை என்னிடம் எனது அம்மா நீ வெளியில் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளாய் அதனால் உனது காலில் கிருமிகள் இருக்கும் காலை அலம்பி விட்டு வீட்டிற்குள் வா என்று சொன்னால் அந்த இழம்பிராயத்தில் கேட்க்கும் மனநிலை என்னிடம் இருந்து இருக்காது.அதனால் சனிபகவானை சொல்லியிருக்கிறார்கள்.அதன் மூலம் எங்களுக்கும் அந்த நல்ல பழக்கம் பழகிவிட்டது.நாங்கள் எங்கு வெளியி சென்றாலும் வீட்டிற்குள் நுழையும் பொழுது காலை நன்றாக அலம்பிவிட்டு தான் செல்கிறோம் .இதனை ஆராய்ந்து பார்க்காமல் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லும் சிலபேர் மூடநம்பிக்கை என்று சொல்கிறார்கள்.இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு செயலுக்குபின்னாலும் ஒரு அர்த்தம் உண்டு.அடுத்த கட்டுரையில் வேறு ஒரு ஒப்பிடலை காண்போம்
என்றும் அன்புடன்
க.சசிகனி
No comments:
Post a Comment