Monday, August 16, 2010

இந்து மதமும் அறிவியலும்

இந்து மதத்தின் மேன்மைகள் உலகம் அறியாததல்ல .அறிவியலுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பினை இந்த கட்டுரையின் மூலம் இனி அறிவோம் .


நமது வரலாறுகளும்,இதிகாசங்களும் பொய்யில்லை.அவை சொல்லும் தத்துவங்களும், அறிவியல் உண்மைகளும் ஏராளம்.அவற்றில் ஒன்றினை நாம் தற்பொழுது பார்ப்போம்.நமது ராமாயணத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு.ராவணன் உருமாறி வந்து சீதாதேவியை கவர்ந்து செல்லும் இடம்.மேம்போக்காக பார்த்தால் ஒரு நிகழ்ச்சி ஆழ்ந்து பார்த்தால் அதில் உள்ள விஞ்ஞானம் தெரியும்.நாம் தற்பொழுது தான் விமானத்தினை பார்க்கிறோம்.ரைட் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்கிறோம்.ஆனால் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது இதிகாசத்தில் விமானம் பற்றியும்,அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள அந்த பகுதியை நன்கு கூர்ந்து பார்த்தால் தற்பொழுது ஒரு விமானம் எப்படி செயல்படுமோ அதே போன்று அந்த நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுஇருக்கும்.ஸ்ரீராமர் பொய்மானை விரட்டி சென்று இருப்பார்.பொய்மான் செய்த சதியை நம்பி சீதாப்பிராட்டி லச்மனனையும் அனுப்பி வைப்பார்.அந்த சமயம் போலிசாமியார் வேடம் தரித்து ராவணன் பிச்சை கேட்டு வருவான்.லட்சுமணன் கோட்டை தாண்டி பிச்சையிட வரும் சீதையை ராவணன் புஷ்பக விமானத்தில் கடத்தி செல்வான்.இது தான் அந்த பகுதி பின்பு குடிலுக்கு திரும்பும் ராம சகோதரர்கள் வணத்தில் குறிப்பிட்ட தூரம் செடி கொடிகள் அழிந்து இருப்பதை காண்பர்.அதற்க்கு காரணம் ராவணன் வந்து சென்ற விமானத்திற்கு இறங்குவதற்கும் ,மேலே கிளம்பி செல்வதற்கும் ஒரு ஓடு பாதை தேவைப்பட்டது நன்கு விளங்கும்.அந்த காட்சி ராமாயணத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.1902 il ரைட் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்லப்படும் விமானத்தின் செயல்பாடுகள் தற்பொழுது எந்த வடிவில் உள்ளதோ அது ௧௭ லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ளது நமக்கு நன்கு விளங்கும்.

அன்புடன்

.சசிகனி