அழகாய் பூக்குதே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கொண்டதாலே
கண்ணில் ஈரம்
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஒ ஒ ஒ
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஒ ஒ ஒ
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஒ ஒ ஒ
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஒ ஒ ஒ
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன்
உன்னாலே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஒருமுறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே ஒ ஒ ஒ
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஒ ஒ ஒ
சிறுதுளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஒ ஒ ஒ
அரைக்கணம் பிரிவில் நரைவிழ செய்தாயே ஒ ஒ ஒ
நீ இல்லா நொடி முதல் உயிரில்லா ஜடத்திப்போல்
ஆஆஆவேனே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கொண்டதாலே
கண்ணில் ஈரம்
No comments:
Post a Comment