Wednesday, September 26, 2012

அறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சி தந்த திருநள்ளாறு திருத்தலம்!

அறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சி தந்த திருநள்ளாறு திருத்தலம்!



திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்று அனைவருக்கும் தெரியும், தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி  பாடுவான் என்று நம்பிக்கை. இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இது அனைவரும் அறிந்தது. இதற்கு அறிவியல் பூர்வமான சிறப்பு என்ன தெரியுமா?..

                    பல நாடுகளின் செயற்கைக்கோள்கள் பல்வேறு காரணங்களுக்காக பூமியை சுற்றி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாட்டின் செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது. இது எப்படி என்பதை ஆராய்ந்த போது ஆய்வு முடிவு மிரள வைத்தது.

                   எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் இந்தியாவின் புதுச்சேரியின் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. அதற்கு காரணம் என்ன

                  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

                 இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தக் கோவில்தான் இந்துக்களால் சனிபகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இதன்மூலம் உலகிலேயே அறிவுத்திறனும், அறிவியலில் ஞானமும் கொண்டவர்கள் அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் புலனாகிறது. 

                சனி கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.

Thursday, August 23, 2012

எது உலகஅதிசயம்?

எது உலகின் அதிசயம்? இத்தாலியில் உள்ள  பைசா நகரத்து சாய்ந்த கோபுரமா அல்லது பாரதத்தின் தஞ்சை பெரியகோயிலா? ஒரு ஒரு அலசல்.

                               உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் சுமார் 177 வருடங்களாக (ஆகஸ்ட்8,1173-1372) மூன்று கட்டமாக கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை கட்டும் போது அதன் கீழ் உள்ள மண்ணை பரிசோதனை செய்யாமல் ஒரு கட்டிடம் கட்டும் முன் செய்யப்படும் எந்த ஒரு அடிப்படை விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் கட்ட ஆரம்பித்தனர். கட்டிடத்தின் அடித்தளம் மிகவும் மோசமாக கட்டப்பட்டது. இதனால் கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் பொழுது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் கட்டிடத்தை கட்டத் தொடங்கும் போது அதன் அடித்தள மண் இறுகி ஓரளவிற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது. எந்த ஒரு கட்டிடக் கலையின் அடிப்படை விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டிட கலைக்கே அவமானமாக விளங்கும் ஒரு கேவலமான கட்டிடத்திற்கு எடுத்துக்காட்டான பைசா கோபுரம் உலக அதிசயப்பட்டியலில் இன்றும் உள்ளது.

                                 நமது பாரத திருநாட்டின் தமிழ்த்தஞ்சையில் கட்டிட கலைக்கே பெருமை சேர்க்கும் மாவீரன் இராஜராஜசோழனால் கட்டப்பட்ட 216அடியில் உலகையே மிரளச்செய்யும் தஞ்சாவூர் ஸ்ரீபிரகதீஸ்வரர் பெரியகோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுர உச்சியில் உள்ள ஒரே ஒரு பாறை மட்டுமே சுமார் 80 டன் (80,000கிலோ)எடை கொண்டதாகும். தஞ்சைப் பகுதியைச் சுற்றி சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இவ்வளவு பெரிய பாறைகளைக் கொண்ட மலைப்பகுதி கிடையாது. பிறகு இவ்வளவு பாறைகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்?, எப்படி கொண்டு வந்தார்கள்?, இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எப்படி பிரமாண்டமான பெரியகோயிலை கட்டினார்கள்? என்பது எல்லாமே ஆச்சர்யமான நம் கண் முன்னே உள்ள உண்மை. உலகமே ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும்  இந்த பெரியகோயில் 1000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக காட்சியளித்து நிற்கிறது. எந்த தொழில் நுட்ப வசதியும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு பிரமாண்டமான பெரியகோயில் எப்படி கட்டப்பட்டது என்ற கேள்விக்கு வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த கோயில் உலக அதிசயப்  பட்டியலில் இல்லை.

                               நன்கு சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டப்படாமல் சாய்ந்து நிற்கும் ஒரு கட்டிடம் உலக அதிசயமா? அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாகவும்,பிரமாண்டமாகவும் நிற்கும் தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம் உலக அதிசயமா? வெளியில் உள்ளதையே பார்த்து வியந்து பேசும் நாம் நமக்கு அருகிலேயே இருக்கும் அரிய பொக்கிசங்களையும் அதன் அருமை பெருமைகளையும் மறந்து விடுகிறோம். 



                       

Friday, August 17, 2012

'நம்பியவருக்கு நடராஜன்,நம்பாதவர்க்கு வெறும் ராஜன்'

  நம்பியவர்களுக்கு நடராஜன் நம்பாதவர்க்கு   வெறும் ராஜன்


மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சமயம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உண்டானது.நீர்த்தேக்கங்கள் அனைத்தும் வற்றிவிட்டன.கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்துபோனது.

                                சென்னையில் இருந்து மக்கள் வெளியேறினால் பிரச்சினை தீரும் என்ற நிலை ஏற்ப்பட்டது.அதிகாரிகளும் இதே யோசனையைத் தெரிவித்தனர்.இந்த யோசனையை முதல்வர் ராஜாஜி ஏற்க்கவில்லை.அவர் வேறொரு கருத்தை வெளியிட்டார்.

                                  அதன்படி ஒரு குறிப்பிட்டநாளில் சென்னையைக் காப்பாற்றுமாறு எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்யும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

                                 சட்டப்பேரவையில் ஒரு கட்சியினர் இராஜாஜி கூறியதைக் கேலி செய்தார்கள்.சென்னை நகரைக் காப்பாற்ற இதுதான் வழியென்றால் மக்களை காப்பாற்ற வழியே இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

                            ஆனால் முதல்வரின் வேண்டுகோளின்படி மக்கள் அனைவரும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.24 மணி நேரத்திற்குள் சென்னை நகர் முழுவதும் மேகங்கள் திரண்டன.மூன்று நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது.நீர்த்தேக்கங்கள்,ஏரி,குளங்கள் அனைத்தும் நிரம்பின.குடிநீர் பிரச்சினையில் இருந்து சென்னை நகரம் தப்பியது.

                               இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு மே மாதத்தில்,அது கடுமையான கோடைகாலம். பிரார்த்தனையால் மழை பெய்யவில்லை என்றும் இது ஒரு தற்செயல் நிகழ்வு என்றும் குற்றம்சாட்டிய கட்சியினர் கருத்து வெளியிட்டனர்.

                                அதற்க்கு இராஜாஜி "நீங்கள் எது வேண்டுமானாலும் கூறுங்கள்.மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால் அதிசயம் நிகழும்"என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு அத்தாட்சி என பதிலளித்தார்.

                                'நம்பியவருக்கு நடராஜன்,நம்பாதவர்க்கு வெறும் ராஜன்'என்று ஒரு சுலவடை சொல்வார்கள்.நம்பினார் கெடுவதில்லை  என்ற வேதங்களின் கூற்றுக்கு இந்த நிகழ்ச்சியை உதாரணமாக சொல்லலாம்.
                                  

Thursday, June 14, 2012

அழகாய் பூக்குதே 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் 
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் 
காதலன் கைச்சிறை காணும் நேரம் 
மீண்டும் ஓர் கருவறை கொண்டதாலே 
கண்ணில் ஈரம் 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஒ ஒ ஒ 
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஒ ஒ ஒ 
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஒ ஒ ஒ 
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஒ ஒ ஒ 

சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் 
உன்னாலே 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

ஒருமுறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே ஒ ஒ ஒ 
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஒ ஒ ஒ 
 சிறுதுளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஒ ஒ ஒ 
அரைக்கணம் பிரிவில் நரைவிழ செய்தாயே ஒ ஒ ஒ 

நீ இல்லா நொடி முதல் உயிரில்லா ஜடத்திப்போல் 
ஆஆஆவேனே 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் 
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் 
காதலன் கைச்சிறை காணும் நேரம் 
மீண்டும் ஓர் கருவறை கொண்டதாலே 
கண்ணில் ஈரம் 







Monday, October 31, 2011

 சசி இஷானா , சசி தரணி

Wednesday, January 5, 2011

காணாமல் போகும் கப்பல்கள்,விமானங்கள் - கதையல்ல நிஜம்?





பெர்முடா முக்கோணம் இது அதிசயம் அல்ல ஆச்சர்யம் இல்லையில்லை அதிர்ச்சி .நவீன அறிவியலுக்கும் விளங்காத அமானுஷ்ய ஆச்சர்ய பிரதேசம்.




























வடக்கு அட்லாண்டிக்

கடற்ப்பரப்பில் பெர்முடா,ப்ளோரிடா, போர்டோரிகா தீவுகளின்மையப்பகுதியில் சுமார் இருபத்தைந்து லட்சம் சதுர கிலோ மீட்டரில் முக்கோண வட்வில் அமைந்துள்ள கடற்பரப்பு தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கபடுகிறது.










பெர்முடா முக்கோணத்தின் வழியாக செல்கிற கப்பல்கள்,விமானங்கள் அதில் பயணம் செய்கிற மனிதர்களுடன் அப்படியே மாயமாய் மறைந்து விடுகிறது.இது வரை ஐம்பது கப்பல்களும்,இருபது விமானங்களும் மாயமாய் மறைந்து விட்டன.அவற்றில் சென்ற ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மனிதர்களும் மாயமாகி விட்டனர்.இதன் வழியாக செல்பவை எப்படி மாயமாய் மறைகின்றன என்று அமெரிக்க நிபுணர்களும், விஞ்ஞானிகளும் தலையை பிய்த்துக்கொல்கிறனர்.










1812 டிசம்பர் 30 அன்று அமெரிக்காவின் pedriyaad எனும் உள்ளாசக்கப்பல் சுமார் 365 பயணிகளுடன் பெர்முடா முக்கோணம் வழியாக மியாமி தீவுக்கு செல்லும் வழியில் மாயமாய் மறைந்து விட்டனர்.கப்பல் கடலில் மூழ்கி இருக்கும் என்று கடற்படையினர் தேடினர் . பெர்முடா முக்கோணத்தின் கடற்படுகையின் எந்த இடத்திலும் கப்பலின் ஒரு உடைந்த பாகம் கூட கிடைக்க வில்லை அதிர்ச்சி என்னவென்றால் அங்கு கடலில் மீன்களே இல்லை என்பதுதான்.










பெர்முடா முக்கோணத்தின் அடிப்பரப்பில் 'வளைகுடா நீரோடை'உள்ளதால் நீரோட்டம் மெக்சிகோ,ப்ளோரிடா வழியாக வடக்கு அட்லாண்டிக் கடல் நோக்கி செல்லும் என்பதால் கப்பலை வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியிலும் தேடினார்கள் . அங்கும் கப்பல் காணவில்லை.










1945 டிசம்பர் ஐந்தாம் தேதி அமெரிக்காவின் 'பிளைட்-19 'எனும் விமானம்தாங்கி போர்க்கப்பல் மியாமி தீவுக்கு பெர்முடா முக்கோணம் வழியாக சென்றது.வழக்கம் போல அதுவும் காணாமல் போனது. திரும்பவும் தேடினார்கள் ஏமாற்றமே மிஞ்சியது."நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை.கடல்நீர் பச்சை கலரில் உள்ளது.எங்களை காப்பாற்றுங்கள்"இது அந்தக்கப்பலின் கேப்டன் கடைசியாக வோயர்லேசில் பேசியது.



















பெர்முடா முக்கோணத்தின் வெப்பமண்டல சுழல் காரணமாக மின்காந்த கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் விமானங்கள் தடுமாறுகின்றன என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.கடற்படுகை படிமங்களில் மீத்தேன் வாயு கசிவால் நீரின் அடர்த்தி குறைகிறது இதனால் கப்பல்கள் மூழ்கலாம் என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.அப்படியே வைத்துகொண்டாலும் விமானம் மற்றும் கப்பலின் பாகங்கள் எங்கே? இதற்க்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.









பெர்முடா முக்கோணத்தில் செவ்வாய் கிரகவாசிகள் இருந்துகொண்டு கப்பல் மற்றும் விமானங்களை கடத்திக்கொண்டு போகிறார்கள் என்ற பேச்சும் உண்டு.புராதான காலத்தில் அந்தப்பகுதியில் வசித்தவர்கள் மந்திர தந்திரத்தில் வல்லவர்கள் .கடல்கோளில் அவர்கள் வசித்த பகுதி கடலுக்குள் போய்விட்டது அவர்களின் ஆவிகள் தான் இதனை செய்கின்றன என்று நம்புவோரும் உண்டு.


ஆனால் இவற்றில் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை.ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டு தானிருக்கிறது.ஆன்னல் இதுவரை மர்மம் விலகவில்லை.என்று விடை கிடைக்கும் என்று உங்களுடன் நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன் அன்புடன் க.சசிகனி