Thursday, June 14, 2012
Monday, October 31, 2011
Monday, January 10, 2011
Wednesday, January 5, 2011
காணாமல் போகும் கப்பல்கள்,விமானங்கள் - கதையல்ல நிஜம்?
பெர்முடா முக்கோணம் இது அதிசயம் அல்ல ஆச்சர்யம் இல்லையில்லை அதிர்ச்சி .நவீன அறிவியலுக்கும் விளங்காத அமானுஷ்ய ஆச்சர்ய பிரதேசம்.
வடக்கு அட்லாண்டிக்
கடற்ப்பரப்பில் பெர்முடா,ப்ளோரிடா, போர்டோரிகா தீவுகளின்மையப்பகுதியில் சுமார் இருபத்தைந்து லட்சம் சதுர கிலோ மீட்டரில் முக்கோண வட்வில் அமைந்துள்ள கடற்பரப்பு தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கபடுகிறது.

பெர்முடா முக்கோணத்தின் வழியாக செல்கிற கப்பல்கள்,விமானங்கள் அதில் பயணம் செய்கிற மனிதர்களுடன் அப்படியே மாயமாய் மறைந்து விடுகிறது.இது வரை ஐம்பது கப்பல்களும்,இருபது விமானங்களும் மாயமாய் மறைந்து விட்டன.அவற்றில் சென்ற ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மனிதர்களும் மாயமாகி விட்டனர்.இதன் வழியாக செல்பவை எப்படி மாயமாய் மறைகின்றன என்று அமெரிக்க நிபுணர்களும், விஞ்ஞானிகளும் தலையை பிய்த்துக்கொல்கிறனர்.
1812 டிசம்பர் 30 அன்று அமெரிக்காவின் pedriyaad எனும் உள்ளாசக்கப்பல் சுமார் 365 பயணிகளுடன் பெர்முடா முக்கோணம் வழியாக மியாமி தீவுக்கு செல்லும் வழியில் மாயமாய் மறைந்து விட்டனர்.கப்பல் கடலில் மூழ்கி இருக்கும் என்று கடற்படையினர் தேடினர் . பெர்முடா முக்கோணத்தின் கடற்படுகையின் எந்த இடத்திலும் கப்பலின் ஒரு உடைந்த பாகம் கூட கிடைக்க வில்லை அதிர்ச்சி என்னவென்றால் அங்கு கடலில் மீன்களே இல்லை என்பதுதான்.
பெர்முடா முக்கோணத்தின் அடிப்பரப்பில் 'வளைகுடா நீரோடை'உள்ளதால் நீரோட்டம் மெக்சிகோ,ப்ளோரிடா வழியாக வடக்கு அட்லாண்டிக் கடல் நோக்கி செல்லும் என்பதால் கப்பலை வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியிலும் தேடினார்கள் . அங்கும் கப்பல் காணவில்லை.
1945 டிசம்பர் ஐந்தாம் தேதி அமெரிக்காவின் 'பிளைட்-19 'எனும் விமானம்தாங்கி போர்க்கப்பல் மியாமி தீவுக்கு பெர்முடா முக்கோணம் வழியாக சென்றது.வழக்கம் போல அதுவும் காணாமல் போனது. திரும்பவும் தேடினார்கள் ஏமாற்றமே மிஞ்சியது."நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை.கடல்நீர் பச்சை கலரில் உள்ளது.எங்களை காப்பாற்றுங்கள்"இது அந்தக்கப்பலின் கேப்டன் கடைசியாக வோயர்லேசில் பேசியது.
பெர்முடா முக்கோணத்தின் வெப்பமண்டல சுழல் காரணமாக மின்காந்த கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் விமானங்கள் தடுமாறுகின்றன என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.கடற்படுகை படிமங்களில் மீத்தேன் வாயு கசிவால் நீரின் அடர்த்தி குறைகிறது இதனால் கப்பல்கள் மூழ்கலாம் என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.அப்படியே வைத்துகொண்டாலும் விமானம் மற்றும் கப்பலின் பாகங்கள் எங்கே? இதற்க்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

பெர்முடா முக்கோணத்தில் செவ்வாய் கிரகவாசிகள் இருந்துகொண்டு கப்பல் மற்றும் விமானங்களை கடத்திக்கொண்டு போகிறார்கள் என்ற பேச்சும் உண்டு.புராதான காலத்தில் அந்தப்பகுதியில் வசித்தவர்கள் மந்திர தந்திரத்தில் வல்லவர்கள் .கடல்கோளில் அவர்கள் வசித்த பகுதி கடலுக்குள் போய்விட்டது அவர்களின் ஆவிகள் தான் இதனை செய்கின்றன என்று நம்புவோரும் உண்டு.
ஆனால் இவற்றில் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை.ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டு தானிருக்கிறது.ஆன்னல் இதுவரை மர்மம் விலகவில்லை.என்று விடை கிடைக்கும் என்று உங்களுடன் நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன் அன்புடன் க.சசிகனி
Tuesday, December 28, 2010
முளைப்பாரி
நண்பர்களே நீங்கள் பார்த்து கொண்டிருப்பது எங்கள் ஊரின் சக்தி வாய்ந்த ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவிற்கு எங்கள் வீடு தயார் செய்த முளைப்பாரியின் வீடியோ
எனது ஊரின் பெயர் திருப்பாலைக்குடி.ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டத்தில் அமைந்த ஊர் எங்களது.கிராமமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இரு சாயலும் கொண்ட ஊர் எங்களது ஊர்.வங்கக்கடல் தாலாட்டும் இரண்டு கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையின் சொந்தக்காரர்கள் நாங்கள்.இதிகாசத்தொடு தொடர்பு கொண்ட ஊர்.திரேதா யுகத்தில் நடந்த ராமாயணத்தில் ஸ்ரீ ராமமூர்த்தி இலங்கை செல்ல கடலை அமைதிபடுத்த யாகம் செய்த தேவிபட்டினம் எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அன்றிலிருந்து அலைகடல் தாலாட்டும் வங்ககடல் எங்கள் பகுதியில் மட்டும் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்கும்.மோர்ப்பண்ணை,திருப்பாலைக்குடி,தேவிபட்டினம் ஆகிய ஊர்களில் மட்டும் கடலில் பெரிய அலைகள் தோன்றுவதில்லை.அதற்க்கு அடுத்து உள்ள ஊர்களில் அலையின் சீற்றம் இருக்கும்.
எங்கள் ஊரில் இஸ்லாமிய ,இந்துமக்கள் சம அளவில் வசிக்கிறோம்.இஸ்லாமியர்களின் வழிப்பாட்டுத்த்லம் மூன்று எங்களது ஊரில் உண்டு.இந்துக்களின் கோவில்கள் இருபதிற்கும் மேல் உண்டு.அதில் எங்கள் பகுதியல் அமைந்த ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கு ஆவணி மாதம் திருவிழா உண்டு.ஆவணி வளர்பிறையில் கோவிலுக்கு காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கும்.திருவிழாவின் சிறப்பு முளைப்பாரி.
காப்புகட்டுதளுக்கு முந்திய தினங்களில் முளைப்பாரி வளர்க்கும் பக்தர்கள் முளைப்பாரி வளர்ப்பதற்கு தேவையான பொருட்களை சேகரிக்க தொடங்குவார்கள்.பசுவின் காய்ந்த சாணம்,செவனாம்பு என்று கிராமங்களில் சொல்லப்படும் ஒரு வகை செடி,சல்லடை அதாவது பனைமரத்தின் சருகு,முத்துக்கள்(சோழ விதை ,பயறு விதை,கடலை விதை).முதல் நாள் காப்பு கட்டியவுடன் பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக பிரிந்து தங்களுக்கு தோதான ஒரு வீட்டில் சென்று தங்கள் சேகரித்து வைத்துள்ள பொருட்களுடன் செல்வர்.அங்கு பாரியினை வைத்து பாரியின் அகன்ற பகுதியின் வழியாக சல்லடையை வைத்து பாரியின் அடிப்பகுதியில் உள்ள சிறிய துவாரத்தினை அடைத்து விடுவர்.பிறகு செவனாம்பு மற்றும் நொறுக்கிய காய்ந்த சாணம் இரண்டினையும் பாரியில் நிரப்பி பின் முத்துக்களை அதில் பரப்பி தண்ணீர் ஊற்றி வைப்பார்.பின்பு தினசரி காலையும் மாலையும் தண்ணீர் ஊற்றி கவனத்தோடு பராமரிப்பார்.ஏழாம் நாள் வரும்பொழுது முத்துக்கள் வளர்ந்து செடியாகிவிடும்.தயார் செய்த முலைப்பாரியினை எட்டாம் நாள் இரவு மாரியம்மனின் கோவில் முன்பு அமைத்துள்ள மேடையில் அனைத்து பக்தர்களும் கொண்டு வந்து வைத்து விடுவர். ஒன்பதாம் நாள் காலையில் புத்தாடை அணிந்து அனைவரும் கோவிலுக்கு வருவர்.பெண்கள் முளைப்பாரி பாடலை பாடிக்கொண்டு முளைகொட்டுவர்.பின்பு பக்தர்கள் அனைவரும் முளைப்பரியினை தலையில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக சென்று கடலில் முலைப்பாரியினை கொட்டி விட்டு கோவிலில் சென்று அம்மனை வணங்கி வீடு வருவர்.
Friday, December 24, 2010
அம்பானிக்கு தனி சட்டமா?
னை அழித்திடுவோம்' என்றான் ஒரு கவிஞன். இன்றைய இந்தியாவில் இருக்க இடமில்லாமல் தெருவிலும் ,சாக்கடைகளின் அருகிலும் வாழும் மக்களின் மத்தியில் ஒரு தனி நபரும் அவரது குடும்பமும் வாழ்வதற்கு இப்படி ஒரு மாளிகை கட்ட நமது அரசியல் சட்டம் இடம் கொடுக்கிறதா?இப்படி பணமும் செல்வாக்கும் உள்ள மனிதர்களின் பின்னால் அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் ஓடினால் எப்பொழுது நாம் வல்லரசாக மாறுவது.Monday, August 16, 2010
இந்து மதமும் அறிவியலும்
இந்து மதத்தின் மேன்மைகள் உலகம் அறியாததல்ல .அறிவியலுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பினை இந்த கட்டுரையின் மூலம் இனி அறிவோம் .
நமது வரலாறுகளும்,இதிகாசங்களும் பொய்யில்லை.அவை சொல்லும் தத்துவங்களும், அறிவியல் உண்மைகளும் ஏராளம்.அவற்றில் ஒன்றினை நாம் தற்பொழுது பார்ப்போம்.நமது ராமாயணத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு.ராவணன் உருமாறி வந்து சீதாதேவியை கவர்ந்து செல்லும் இடம்.மேம்போக்காக பார்த்தால் ஒரு நிகழ்ச்சி ஆழ்ந்து பார்த்தால் அதில் உள்ள விஞ்ஞானம் தெரியும்.நாம் தற்பொழுது தான் விமானத்தினை பார்க்கிறோம்.ரைட் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்கிறோம்.ஆனால் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது இதிகாசத்தில் விமானம் பற்றியும்,அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள அந்த பகுதியை நன்கு கூர்ந்து பார்த்தால் தற்பொழுது ஒரு விமானம் எப்படி செயல்படுமோ அதே போன்று அந்த நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுஇருக்கும்.ஸ்ரீராமர் பொய்மானை விரட்டி சென்று இருப்பார்.பொய்மான் செய்த சதியை நம்பி சீதாப்பிராட்டி லச்மனனையும் அனுப்பி வைப்பார்.அந்த சமயம் போலிசாமியார் வேடம் தரித்து ராவணன் பிச்சை கேட்டு வருவான்.லட்சுமணன் கோட்டை தாண்டி பிச்சையிட வரும் சீதையை ராவணன் புஷ்பக விமானத்தில் கடத்தி செல்வான்.இது தான் அந்த பகுதி பின்பு குடிலுக்கு திரும்பும் ராம சகோதரர்கள் வணத்தில் குறிப்பிட்ட தூரம் செடி கொடிகள் அழிந்து இருப்பதை காண்பர்.அதற்க்கு காரணம் ராவணன் வந்து சென்ற விமானத்திற்கு இறங்குவதற்கும் ,மேலே கிளம்பி செல்வதற்கும் ஒரு ஓடு பாதை தேவைப்பட்டது நன்கு விளங்கும்.அந்த காட்சி ராமாயணத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.1902 il ரைட் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்லப்படும் விமானத்தின் செயல்பாடுகள் தற்பொழுது எந்த வடிவில் உள்ளதோ அது ௧௭ லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ளது நமக்கு நன்கு விளங்கும்.
அன்புடன்
க.சசிகனி

